கோவையில் ரூ.94 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த மேயர் கல்பனா

கோவை தெற்கு மற்றும் மத்திய மண்டலங்களில் ரூ.94 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ நகர்நல மையம்‌ கூடுதல் கட்டிடம், வகுப்பறைகள்‌ மற்றும்‌ கழிவறைகள்‌ கட்டுமான பணிகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.


கோவை: கோவை‌ மாநகராட்சி மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.83க்கு உட்பட்ட சுங்கம்‌ நகர்நல மையத்தில்‌ பெங்களுரை சேர்ந்த HF Interior தொண்டு நிறுவனம்‌ நிதியிலிருந்து ரூ.44 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ மருத்துவமனையின்‌ கூடுதல்‌ கட்டிடங்கள்‌, குடிநீர் மற்றும்‌ கழிவறை வசதிகள்‌ உள்ளிட்ட கட்டுமான பணிகள் நடைபெறவுள்ளது‌.

தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.88க்குட்பட்ட குனியமுத்தூர்‌, ரைஸ்மில்‌ சாலையில்‌ உள்ள மாநகராட்சி தொடக்க பள்ளியில்‌ அமெரிக்காவில்‌ வசித்து வரும்‌ செந்தில்குமார்‌, ஹேமாகுமார்‌ ஆகியோர்‌ குடும்ப சார்பில்‌ 100 சதவீத பங்களிப்பாக நமக்கு நாமே திட்டத்தில்‌ ரூ.50 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ 5 கூடுதல்‌ வகுப்பறைகள்‌ மற்றும்‌ கழிவறைகள்‌ கட்டுமான பணிகள் நடைபெறவுள்ளது.



மொத்தம் ரூ.94 லட்சம்‌ மதிப்பீட்டிலான இந்த 2 கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வியில் கோவை மாநகர மேயர் கல்பனா ஆனந்தகுமார்‌ பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார்‌.



இந்நிகழ்ச்சியில்‌ துணை மேயர்‌ ரா.வெற்றிசெல்வன்‌, மாநகராட்சி துணை ஆணையாளா்‌ மரு.மோ.ஷர்மிளா, மத்திய மண்டல தலைவா்‌ மீனாலோகு, மாமன்ற உறுப்பினர்கள்‌ செந்தில்குமார்‌, வி.சுமா, நகர்நல அலுவலர்‌ மரு.பிரதீப்,‌ வா.கிருஷ்ணகுமார்‌, உதவி ஆணையாளர்‌ மகேஷ் கனகராஜ்‌,

மத்திய மண்டல நகர்நல அலுவலா்‌ மரு.வசந்த்‌ திவாகர்‌, சுகாதார அலுவலர்‌ ராமச்சந்திரன்‌, உதவி பொறியாளர்‌ கனகராஜ்‌, சுகாதார ஆய்வாளர்‌ ஸ்ரீரங்கராஜ்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உள்ளிட்டோர் உடனிருந்தனர்‌.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...