கோவையில் வேளாண் வளர்ச்சி திட்ட விளக்கச் சிறப்பு பிரச்சார ஊர்திகளை துவக்கி வைத்த ஆட்சியர் சமீரன்

ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் பொறியியல் துறை சார்பில் நடைபெற்ற கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட விளக்க சிறப்பு பிரச்சார ஊர்திகளை ஆட்சியர் சமீரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.


கோவை: ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சி, தன்னிறைவான கிராமத்தை உருவாக்கும் நோக்கில், கடந்த மே மாதம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 5 ஆண்டுகளில், தமிழகத்தில் உள்ள சுமார் 12,525 கிராம பஞ்சாயத்துகளில் இத்திட்டத்தை செயல்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டன.



கிராம வேளாண் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல். மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்தல், ஊரக வளர்ச்சி துறையின் மூலமாக பண்ணை குட்டை அமைத்தல், கூட்டுறவு சங்கங்களின் மூலம் அதிக பயிர் கடன்கள் வழங்குதல். பாசன நீர் வழித் தடங்களை தூர்வாருதல், உள்ளிட்ட கிராமப் பொருளாதார மேம்பாட்டுக்காக உள்ளிட்ட பல திட்டங்கள் இந்த திட்டத்தின் கீழ் வரும்.

இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்துள்ள நிலையில், இது குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல்வேறு இடங்களில் அரசு சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், வேளாண் மற்றும் உழவர் நலத்துறையில் உணவு மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின் சார்பாக மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம் வட்டாரங்களில் சிறுதானியங்களின் சாகுபடியை ஊக்குவிக்கும் வண்ணம் பிரச்சார ஊர்திகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார்.



இந்த வாகனங்களில் சிறுதானிய பயிர்கள் குறித்தும் அதன் நன்மைகள் குறித்தும் விவசாயிகள் சிறுதானிய பயிர்களை விளைவிக்கும் பொழுது அதனை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது குறித்த விளக்க பலகைகள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் சௌமியா, வேளாண்மை இணை இயக்குனர் முத்துலட்சுமி, வேளாண்மை துணை இயக்குனர் தமிழ்ச்செல்வி, கிருஷ்ணவேணி, பெருமாள் சாமி, உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...