பீளமேடு அருகே தனியார் நிறுவனம் ஆக்கிரமித்துள்ள நிலத்தை மீட்டு தரக்கோரி அருந்ததியர் இன மக்கள் ஆட்சியரிடம் மனு

கோவை பீளமேடு அடுத்த ஏடி காலனி அருந்ததியர் இன மக்கள், விசாகா ஸ்டீல் நிறுவனம் ஆக்கிரமித்துள்ள நிலத்தை மீட்டு, தங்களுக்கு வீடு மற்றும் கழிவறை உள்ளிட்டவற்றை கட்டித்தர வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு.



கோவை: கோவை மாவட்டம் பீளமேடு அடுத்த ஏடி காலனியில் வசிக்கும் அருந்ததியர் மக்கள் தங்களுக்கு சொந்தமான நிலத்தை தனியார் நிறுவனத்திடம் இருந்து மீட்டு தங்களுக்கு வீடு மற்றும் கழிவறைகளை கட்டி தர வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



மனு அளிக்க வந்த அருந்ததியர் இன மக்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.



இது குறித்து அவர்கள் கூறியதாவது, எங்களுக்கு சொந்தமான இடத்தை விசாகா ஸ்டீல் நிறுவனத்திடம் இருந்து மீட்டெடுக்க வேண்டும். வீடில்லா அருந்ததியர் இன மக்களுக்கு வீடு வழங்க வேண்டும்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக கழிவறை வசதி இல்லாமல் சிரமப்பட்டு வரும் எங்களுக்கு, PSG மருத்துவமனையின் மன்றம் அமைந்துள்ள அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டு அங்கு போர்க்கால அடிப்படையில் பொது கழிவறை அமைத்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அருந்ததியர் இன மக்கள் கோரிக்கைகளை முன் வைத்து பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பியதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...