திருப்பூர் ரயில் நிலையம் முன்பு ஹிந்தியில் வைக்கப்பட்ட ‘வேலைக்கு ஆட்கள் தேவை’ பேனரால் பரபரப்பு

திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் ஆர்டர்கள் குறைந்துள்ளதாக கூறப்படும் சூழலில் வேலைக்கு ஆள் தேவை என ஹிந்தியில் வைக்கப்பட்டுள்ள இந்த பேனரால், தமிழக பணியாளர்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் ரயில் நிலையம் முன்பு ஹிந்தியில் அச்சடிக்கப்பட்ட‘வேலைக்கு ஆட்கள் தேவை’ பேனர் வைக்கப்பட்டுள்ளதால், தமிழக பணியாளர்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர அளவிலான ஏராளமான பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த பின்னலாடை நிறுவனங்களில் ஆர்டர்கள் குறைந்து வேலை இல்லை என பரவலாக கூறப்பட்டு வருகின்றன.



இந்நிலையில் திருப்பூர் ரயில் நிலையம் முன்பு வேலைக்கு ஆட்கள் வேண்டும் என ஹிந்தி மொழியில் பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. ஹிந்தி மொழியில் மட்டும் அச்சடிக்கப்பட்டுள்ள அந்த பேனரில் வேலைக்கு ஆள் வேண்டும் என்றும், நூற்பாலை, டையிங், காம்பேக்டிங், எம்பிராய்டரி, கோழி பண்ணை, ஹோட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு ஆட்கள் தேவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பத்தாயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் வரையிலும் ஊதியம் வழங்கப்படும் என தொடர்பு எண்ணுடன் பெரிய அளவில் விளம்பர பேனர் வைக்கப்பட்டுள்ளது.

ஹிந்தி மொழியில் மட்டுமே இந்த பேனர் அச்சடிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளதால், தமிழக தொழிலாளர்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...