கோவை குருடம்பாளையத்தில் நடைபெற்ற கொ.ம.தே.க ஊராட்சி அளவிலான ஆலோசனை கூட்டம் - 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட குருடம்பாளையம் பகுதியில் நடைபெற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஊராட்சி ஆலோசனை கூட்டத்தில், கட்சியில் உறுப்பினர்களை அதிக அளவில் சேர்ப்பது உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


கோவை: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குருடம்பாளையம் பகுதியில் கடந்த 24ஆம் தேதி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஊராட்சி அளவிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் ஜீவானந்தம் மனோகரனுக்கு சொந்தமான ரோஜா தோட்டத்தில் மாவட்ட விவசாய அணி துணைச் செயலாளர் A.P.வரதராஜன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில், கோவை மேற்கு மாவட்ட செயலாளரும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான K.S.குழந்தைவேலு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்த கூட்டத்தில், முக்கியமான 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1) வரும் 2023 ஆம் ஆண்டில் கோவை மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிளைகளிலும் நடைபெறும் கொடியேற்று விழாவை சிறப்பாக நடத்த வேண்டும்.

2) கிளைகள் தோறும் கட்சி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும்.

3) கிளைகளில் உள்ள உறுப்பினர்களின் இல்லத்திற்கு கட்சியின் காலண்டர்களை (Yearly calendar ) கொண்டு சேர்க்க வேண்டும்.

4) முக்கியமான கிராமப்புற அடிப்படை வசதிகள் மற்றும் பொதுமக்கள் பிரச்சினைகளுக்காக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி குரல் கொடுக்க வேண்டும்.

5) "மறுமலர்ச்சி கொங்குநாடு" பத்திரிக்கையின் சந்தாவை அதிகப்படுத்த வேண்டும்.

6) தீரன் படை மற்றும் மகளிர் அணி அதிகப்படியான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.

ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



இந்த கூட்டத்தில், ஒன்றிய செயலாளர் தங்கவேல் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் கீரணத்தம் தனுஷ்கோடி, மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் கவிதா அருள்பிரகாஷ், மாவட்ட விவசாய அணி செயலாளர் மருதாசலம், ஒன்றிய துணைச் செயலாளர் பன்னிமடை பொன்னுச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதேபோல், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய பொறுப்பாளர்கள் கணேசன், தங்கவேல் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கவுன்சிலர் தீபன்குமார், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் ஸ்ரீதர் கீரணத்தம் ஊராட்சி கவுன்சிலர் பரமேஸ்வரன்,

மேலும், கிளை நிர்வாகிகள் சூர்யா, ராஜகோபால், P.பாபு, தாமோதரசாமி, மகளிர் அணி பொறுப்பாளர்கள் ஜெகதீஸ்வரி, காஞ்சனா சாவித்திரி, காயத்ரி பெரியநாயக்கன் பாளையம் பேரூராட்சி நகர செயலாளர் பாலு (எ) பாலகிருஷ்ணன், பன்னிமடை ஊராட்சி செயலாளர் சிவஞானம் மாவட்ட IT WING செயலாளர் கார்த்திகேயன் ஆறுக்குட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், கூட்டம் தொடங்குவதற்கு முன் மாவீரன் தீரன் சின்னமலை திருவுருவப் படத்திற்கு அனைத்து நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.

Newsletter

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...