கோவையில் லாட்டரி விற்ற முதியவர் கைது - லாட்டரி சீட்டுகள், ரூ. 37,500 பணம் பறிமுதல்

குனியமுத்தூர் பகுதியில் லாட்டரி சீட்டுகளை விற்று வந்த மாற்றுத்திறனாளியான கோவிந்தராஜ் என்ற முதியவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ. 39,500 பணத்தை குனியமுத்தூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.



கோவை: தமிழ்நாட்டு லாட்டரிச் சீட்டுக்கு மட்டுமல்லாமல், பிற மாநிலங்களுடைய லாட்டரிச் சீட்டுகளைத் விற்க, தமிழ்நாடு பரிசுத் திட்டங்கள் தடைச்சட்டம்,1979-ன் கீழ் 2003-ம் ஆண்டு தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனை தடை செய்யப்பட்டது.

இருப்பினும், தமிழ்நாடு - கேரளா எல்லையோர மாவட்டங்களில் கேரளா லாட்டரி விற்பனை சட்ட விரோதமாக நடந்து வருகின்றன. குறிப்பாக, கேரளாவிற்கு மிக அருகில் கோவை மாவட்டம் உள்ளதால், தமிழ்நாடு - கேரளா எல்லையில் உள்ள வாளையாரில் இருந்து லாட்டரிகளை வாங்கி வந்து கோவையில் விற்று வருகின்றனர்.

இந்த நிலையில், குனியமுத்தூர் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரிகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, குனியமுத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்ததில் முதியவர் ஒருவர் போலீசாரிடம் வசமாக சிக்கிக் கொண்டார்.

போத்தனூர் பகுதியைச் சார்ந்த 70 வயது முதியவரான கோவிந்தராஜ் என்பவர் குனியமுத்தூர் பகுதிகளில் கேரளா லாட்டரி சீட்டுகளை விற்று வந்துள்ளார். இவரை, கையும் களவுமாகப் பிடித்த போலீசார், அவரிடம் இருந்து 166 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

ஒரு சீட்டு 40 ரூபாய் மதிப்பீட்டில் மொத்தமாக 6640 ரூபாய் மதிப்பிலான லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அது மட்டுமின்றி, 39 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்க பணமும் பறிமுதல் செய்யப்பட்டன. பிடிபட்ட முதியவர், மாற்றுத்திறனாளி என்பதனால் அவரை போலீசார் ஸ்டேஷன் பிணையில் விடுவித்தனர்.

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எசரித்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...