கூடலூர் அருகே கோழி ஏற்றி வந்த வாகனத்தை மறித்து தாக்கிய காட்டு யானை - அச்சத்தில் அலறியடித்து ஓடிய வாகன ஓட்டுநர்..!

நீலகிரி கூடலூர் நகர பகுதியில் புகுந்த காட்டு யானை, கோழி ஏற்றி வந்த வாகனத்தை மறித்து தாக்க முயன்ற நிலையில், அச்சத்தில் ஓட்டுனரும் உதவியாளரும் அலறியடித்து ஓடிய சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் வனப்பகுதியில் இருந்து வெளியில் வரும் காட்டு யானைகள் உணவு தேடிகிராம பகுதிகள் மற்றும் கூடலூர் நகர பகுதிக்கு வருவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.



இந்த நிலையில் புத்தாண்டு நாளான இன்று அதிகாலை காட்டு யானை ஒன்று திடீரென நகருக்குள் வந்துள்ளது. செம்பாலா பகுதிக்கு வந்த அந்த யானை திடீரென முக்கிய சாலையில் நடந்து வந்ததை கண்டு பொதுமக்கள் அலறியடித்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.



அப்போது அவ்வழியே கோழிகளை ஏற்றிக் கொண்டு சென்ற வாகனம் ஒன்று வந்துள்ளது. இதனை கண்ட காட்டு யானையை வாகனத்தை மறித்து தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதனால், அச்சமடைந்த வாகன ஓட்டுநர் மற்றும் உதவியாளர், வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பியோடியுள்ளனர். பின்பு வேகமாக வந்த யானை அந்த வாகனத்தை இடித்து தள்ளிவிட்டு தொடர்ந்து நடந்து சென்றது.

யானை வாகனத்தை தாக்கும் காட்சிகள் அங்கிருந்து ஒரு வணிக நிறுவனத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. தற்பொழுது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...