கூடலூர் அருகே கோழி ஏற்றி வந்த வாகனத்தை மறித்து தாக்கிய காட்டு யானை - அச்சத்தில் அலறியடித்து ஓடிய வாகன ஓட்டுநர்..!

நீலகிரி கூடலூர் நகர பகுதியில் புகுந்த காட்டு யானை, கோழி ஏற்றி வந்த வாகனத்தை மறித்து தாக்க முயன்ற நிலையில், அச்சத்தில் ஓட்டுனரும் உதவியாளரும் அலறியடித்து ஓடிய சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் வனப்பகுதியில் இருந்து வெளியில் வரும் காட்டு யானைகள் உணவு தேடிகிராம பகுதிகள் மற்றும் கூடலூர் நகர பகுதிக்கு வருவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.



இந்த நிலையில் புத்தாண்டு நாளான இன்று அதிகாலை காட்டு யானை ஒன்று திடீரென நகருக்குள் வந்துள்ளது. செம்பாலா பகுதிக்கு வந்த அந்த யானை திடீரென முக்கிய சாலையில் நடந்து வந்ததை கண்டு பொதுமக்கள் அலறியடித்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.



அப்போது அவ்வழியே கோழிகளை ஏற்றிக் கொண்டு சென்ற வாகனம் ஒன்று வந்துள்ளது. இதனை கண்ட காட்டு யானையை வாகனத்தை மறித்து தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதனால், அச்சமடைந்த வாகன ஓட்டுநர் மற்றும் உதவியாளர், வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பியோடியுள்ளனர். பின்பு வேகமாக வந்த யானை அந்த வாகனத்தை இடித்து தள்ளிவிட்டு தொடர்ந்து நடந்து சென்றது.

யானை வாகனத்தை தாக்கும் காட்சிகள் அங்கிருந்து ஒரு வணிக நிறுவனத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. தற்பொழுது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...