திமுகவின் 18 மாத கால ஆட்சியில் கோவைக்கு எதுவும் செய்யவில்லை - கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

திமுக அரசை கண்டித்து கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பின் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, திமுக கூட்டணி கட்சிகள் அடிமைகளாக செயல்படுவதாக விமர்சித்தார்.



கோவை: சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்து இன்று அதிமுக இபிஎஸ் அணியினர் தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விலை வாசி உயர்வை கண்டித்தும் திமுக அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தொண்டாமுத்தூர் பேரூராட்சி கழக செயலாளர் சங்கர் தலைமை பொறுப்பு வகித்தார். இதில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது, விலைவாசி உயர்வை கண்டித்து கோவையில் ஏற்கனவே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இப்போது ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

திமுக அரசு விலை உயர்வை குறைக்க வேண்டும். கோவையில் பழுதடைந்துள்ள சாலைகளை சரி செய்ய வேண்டும். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டு திமுக வால் கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்களை எல்லாம் செயல்படுத்த வேண்டும்.

இந்த 18 மாதங்களில் திமுக அரசு கோவை மாவட்டத்திற்கு எதனையும் செய்யவில்லை. தற்போது உள்ள சூழலில் பல்வேறு ஊடகங்கள் திமுக அரசை தாங்கி பிடித்துக் கொண்டிருக்கின்றன. அந்த ஊடகங்கள் கைவிட்டால் திமுகவினர் போய் விடுவார்கள்.

திமுக கூட்டணி கட்சிகள் அடிமையாக இருக்கின்றனர். உதாரணத்திற்கு குட்டிக்கரணம் போட சொன்னாலும் குட்டிக்கரணம் போடுவார்கள் போல. மதிமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகள் எல்லாம் திமுக விற்கு அடிமைகளாக உள்ளனர். திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...