கோவை சின்ன தடாகம் அருகே போர்வெல் குழாய்களை சேதப்படுத்தி காட்டு யானை அட்டகாசம் - பரபரப்பு..!

சின்ன தடாகம் அருகே மணி என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை, அங்கிருந்த போர்வெல் குழாய்களை சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியான ஆனைகட்டி மாங்கரை வனப்பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வசித்து வருகின்றன.

இங்குள்ள காட்டு யானைகள் அவ்வப்போது மலை அடிவாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் தோட்டங்கள் மற்றும் விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது வாடிக்கையாகி வருகிறது.

இதனிடையே தடாகம் பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகள் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்களில் கடந்த 2 மாதங்களாக தினமும் இரவு நேரத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் கோவை சின்ன தடாகம் பகுதியில் மணி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் நேற்றிரவு புகுந்த காட்டு யானை அங்கிருந்த போர்வெல் குழாய்களை பிடுங்கி சேதப்படுத்தி விட்டுச் சென்றுள்ளன. இச்சம்பம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக விவசாய நிலங்களில் யானைகள் புகுவதை உடனடியாக தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...

கோவில்மேட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மா...

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...