நீலகிரியில் 1,338 பயனாளிகளுக்கு ரூ.27.67 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

நீலகிரி மாவட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் சார்பில் 1,338 பயனாளிகளுக்கு ரூ.27.67 இலட்சம் மதிப்பில் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கபட்டன.



நீலகிரி: நீலகிரி மாவட்டம், உதகை தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் சார்பில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் 739 பயனாளிகளுக்கு ரூ.12 இலட்சம் மதிப்பில் பாதுகாப்பு உபகரணங்களையும், 599 பயனாளிகளுக்கு ரூ.15.64 இலட்சம் மதிப்பில் கல்வி, திருமணம், ஓய்வூதியம், இயற்கை மரணம் உதவித்தொகை என மொத்தம் 1,338 பயனாளிகளுக்கு ரூ.27.67 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.



பின்னர் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்,

தொழிலாளர் துறையின் கீழ் 18 தொழிலாளர் நலவாரியங்கள் செயலபட்டு வருகின்றன. அனைத்து மக்களுக்கும் அரசு நலத்திட்ட உதவிகள் சென்றடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணியாற்றி வருகிறார்.

பெண் ஆட்டோ தொழிலாளர்கள் சொந்தமாக ஆட்டோ வாங்குவதற்கு ரூ.1 இலட்சம் மானியம் வழங்க வழிவகையும், 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு ரூ.1000 கல்வி உதவித்தொகையும், திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித்தொகை, பதிவு பெற்ற தொழிலாளி இயற்கை மரணம் அடைந்தால் இயற்கை மரண நிதி உதவி,

பதவி பெற்ற தொழிலாளி விபத்தின் காரணமாக விபத்து ஊனம் ஏற்பட்டால் அதற்கான உதவித்தொகை, கண் கண்ணாடி உதவித்தொகை, 60 வயது நிறைவுபெற்ற அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஒய்வூதியம், விபத்து ஏற்பட்டு விபத்து ஊனம் ஏற்படும் நிகழ்வுகளில் முடக்கு ஒய்வுதியம் ஆகியவைகள் முதலமைச்சரால் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.



இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் அம்ரித், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தின் தலைவர் பொன்குமார், தொழிலாளர் இணை ஆணையர் (ஈரோடு) சசிகலா, உதகை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மாயன் (எ) மாதன், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) லெனின் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...

Heavy Rain, Strong Winds Lash Thudiyalur and Surrounding Areas

Heavy rain accompanied by strong winds lashed Thudiyalur and several parts of Coimbatore’s northern outskirts for more t...

துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை

கோவை துடியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...