திருப்பூரில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைப்பதற்காக மாரத்தான்!

திருப்பூர் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைப்பதற்கு நிதி திரட்டும் வகையில், திருப்பூர் ரோட்டரி சங்கம் சார்பில் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இதனிடையே திருப்பூர் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைப்பது தொடர்பாக தமிழக அரசுடன் தனியார் தொண்டு நிறுவனங்கள் இணைந்துள்ளன.



இதன் ஒரு பகுதியாக திருப்பூர் ரோட்டரி சங்கம் சார்பில் தொண்டு நிறுவனங்கள் இணைந்து புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு நிதி திரட்டும் வகையில் திருப்பூரில் மாரத்தான் போட்டியை இன்று நடத்தியது.



திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியை செய்தித் துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் பாடி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினித் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.



திருப்பூர் சிக்கன்னா கல்லூரியில் துவங்கிய இந்த மாரத்தான் போட்டி கணியம்பூண்டி வரை சென்று மீண்டும் சிக்கன அரசு கலைக் கல்லூரியில் முடிவடைந்தது. இந்த மாரத்தான் 21, 10 கிலோமீட்டர் என இரண்டு பிரிவுகளாகவும், 5 கிலோமீட்டர் வாக்கத்தான் போட்டியும் நடைபெற்றது.



சுமார் 12 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...