மாலை 3 மணிக்கு விழிப்புணர்வு அவசர கூட்டம் - கோவை மருந்து வணிகர்களுக்கு அழைப்பு

கோவை மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு துறை, சுகாதாரத்துறை இணைந்து இன்று (10.01.2023) மாலை 3 மணியளவில் சமரச சுத்த சன்மார்க்க சங்க கட்டிடத்தில் நடைபெறவுள்ள விழிப்புணர்வு அவசர கூட்டத்தில் அனைத்து மருந்து வணிகர்கள் பங்கேற்க அழைப்பு.


கோவை: கோவை மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு துறை, சுகாதாரத்துறை, மருந்து வணிகர் சங்கம் இணைந்து நடத்தும் அவசர கூட்டத்தில் அனைத்து மருந்து வணிகர்களும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கோவை மாவட்ட மருந்து வணிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கோவை மாவட்டத்தில் மருந்து இருப்பு பராமரித்தல், வலி நிவாரணி மாத்திரைகள், கருத்தடை மாத்திரைகள், இவ்வகையான மருந்துகள் விற்பனை செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய அரசு வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து விளக்கப்பட உள்ளன.

இதற்கான விழிப்புணர்வு கூட்டம் இன்று (10.01.2023) மாலை 3 மணியளவில், சமரச சுத்த சன்மார்க்க சங்க கட்டிடத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வானது, கோவை மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு துறை மற்றும் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் நடத்தப்படுகிறது.

இந்த கூட்டத்தில், மருந்து கட்டுப்பாட்டு துறை துணை இயக்குனர், சுகாதாரத்துறை இணை இயக்குநர் மற்றும் அனைத்து மருந்து ஆய்வாளர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்க உள்ளனர்.

இந்த நிகழ்வில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து மருந்து வணிகர்களும் கலந்து கொண்டு பயனடைய வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...