'நொய்யல் ஆற்றை மீட்டெடுப்பது அவசியம்..!' - கோவையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ஆளுநர் அரசியல் செய்யக்கூடாது. தமிழக அரசும் ஆளுநரை மதிக்க வேண்டும். ஆளுநர் அரசியல் சாசன பொறுப்பில் இருப்பவர் வேறுவிதமான அரசியலில் அவர் ஈடுபடக்ககூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் பசுமை தாயகம் சார்பில் "நொய்யல் ஆற்றை மீட்டு எடுப்போம்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் இன்று நடைபெறுகிறது. இதில், பங்கேற்பதற்காக கோவை வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

நொய்யல் ஆற்றை மீட்டு எடுப்போம் என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்களின் முக்கிய நோக்கமே நொய்யல் ஆற்றை மீட்க வேண்டும் என்பதுதான். நொய்யலைக் காப்பற்ற வேண்டும் என்ற நிலைபோய், தற்போது மீட்க வேண்டும் என்ற நிலையில் நாம் உள்ளோம். முதல் கட்டமான முயற்சி.

மன்னராட்சிக் காலத்தில், சேர, சோழ, பாண்டிய மண்னர்கள் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து நொய்யலை பாதுகாத்தனர். 32 அணை, குளம் மற்றும் ஏரிகளை உருவாக்கி இந்த பகுதியில் வளர்ச்சிக்கான திட்டத்தை வகுத்ததனர்.

நொய்யலாற்றின் மூலம் சுமார் 4.5 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெற்றுவந்த நிலையில், கடந்த 40 ஆண்டுகாலமாக திடக்கழிவு, ரசாயன கழிவு, சாயக்கழிவுகள், சாக்கடை கழிவு, மணல் கொள்ளை, செங்கல் சூளை மணல் கொள்ளை, போன்றவற்றாலும், ஆக்கிரமிப்புகளாலும் ஆறு கடுமையாக பாதிக்கபட்டுள்ளது

கண்டிப்பாக இந்த ஆற்றை காப்பாற்ற வேண்டும். பாமக மற்றும் பசுமை தாயகமும் இணைந்து இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். மக்களை ஒன்றினைத்து நொய்யலை மீட்டு எடுப்பேன்" என்ற நம்பிக்கையில் இங்கு வந்திருக்கிறேன்.

நொய்யல் ஆற்றில் வரும் தண்ணீர், சுத்திகரிப்பு என்பதே இல்லாமல் திருப்பூரில்தான் அதிகளவில் மாசடைகிறது. அரசியல் நோக்கம் பாராமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

நொய்யலுக்கு என்று 2500 ஆண்டுகாலம் கடந்த வரலாறு உள்ளது. நொய்யலுக்கும் சோழர்களுக்கும் மிகப்பெரிய தொடர்பு இருக்கிறது. கடந்த 5, 10 ஆண்டுகளாக நடைபெற்ற பணிகளில் பல்வேறு ஊழல்கள் நடந்திருப்பது உண்மைதான்.

ஆளுநரும் ஆளும் கட்சியும் இணைந்து தமிழக முன்னேற்றத்திற்கு செயல்பட வேண்டும். ஆளுநர் அரசியல் செய்யக்கூடாது, தமிழக அரசும் ஆளுநரை மதிக்க வேண்டும். ஆளுநர் அரசியல் சாசன பொறுப்பில் இருப்பவர் வேறுவிதமான அரசியலில் அவர் ஈடுபடக்ககூடாது

மாநிலத்தில் தீர்க்கப்பட வேண்டிய பல்வேறு பிரச்சனைகள் இருக்கும் நிலையில், தமிழ்நாடா? தமிழகமா? திராவிடமா? திராவிட நாடா? மத்திய அரசா? ஒன்றிய அரசா? போன்ற விவாதங்களில் ஆளுநர் ஈடுபடக்கூடாது.

ஆன்லைன் சூதாட்டத்தால், வாரம் ஒரு தற்கொலை நடக்கிறது. அவர்களின் குடும்பம் நிற்கதியில் நிற்கிறது. ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க ஆளுநர் கையெழுத்து போடாமல் காலதாமதம் செய்து வருவது ஏன்.

ரேஷன் கடை பொங்கல் பரிசு என்பது எப்போதுமே வரும் பிரச்சனைதான். பொங்கல் பரிசு தொகை ரூ.1000 -ஐ ஏன் பயனாளர்கள் வங்கி கணக்கில் செலுத்த கூடாது? இந்த டிஜிட்டல் உலகில் இது சாத்தியம் தானே? அரசால் ஏன் அதனை செய்ய இயலவில்லை?

2026ல் பாமக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைப்பதே எங்கள் இலக்கு. கேரளா அரசு டிஜிட்டல் சர்வே தொடர்பாக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதனால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு வரும், தமிழக அரசு ஒரு அமைச்சாரவை குழுவை அமைத்து கேரள முதல்வரிடம் பேசி இரு மாநிலமும் இணைந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Newsletter

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...