கோவையில் அழகு நிலையத்தில் பெண்களைக் காட்டி பாலியல் உறவுக்கு அழைத்ததாக இளைஞர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அப்பகுதியில் இருந்த அழகு நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த மேத்யூ என்ற நபர் பெண்களைக் காட்டி பாலியல் உறவிற்கு அழைத்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த இளைஞர் பணத்திற்காக பெண்களைக் காட்டி பெண் உள்ளிட்ட 2 பேர் தன்னை பாலியல் உறவிற்கு அழைத்ததாக சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மேத்யூ மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.