கோவை மதுக்கரை அருகே கிணற்றில் இருந்து விவசாயி சடலமாக மீட்பு - குடும்பத்தினர் சோகம்..!

மதுக்கரை அடுத்த அரிசிபாளையம் பகுதியை சேர்ந்த ரங்கசாமி (68) என்ற விவசாயி, அவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் மதுக்கரை அடுத்த அரிசிபாளையம் அருகேயுள்ள செட்டியார் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி (68).

விவசாயியான இவர், கடந்த 6 மாதமாக மனக்குழப்பத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர், வெளியில் சென்றுவிட்டு, 2 அல்லது 3 நாட்கள் கழித்து வீட்டுக்கு வருவார் எனவும் தெரிகிறது.

இந்நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்த ரங்கசாமி திடீரென மாயமானதாக தெரிகிறது. இரவு நீண்ட நேரம் ஆகியும் வராததால் அவரது மகன் வினோத் குமார் பல்வேறு பகுதிகளில் தேடி பார்த்துள்ளார்.

ஆனால் எங்கும் கிடைக்காததால், மீண்டும் வீட்டிற்கு வந்து விடுவார் என எண்ணி வினோத் குமார் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் காலை வழக்கம் போல வினோத்குமார் கிணற்றில் மோட்டார் போட சென்றுள்ளார்.

அப்போது ரங்கசாமி கிணற்றில் சடலமாக மிதந்தது தெரியவந்தது. இதையடுத்து வினோத்குமார் மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.



இதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரங்கசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...