கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து 4 வாகனங்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை: கோவை வெள்ளலூர் பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கு உள்ளது. இங்கு நகரில் சேகரிப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு தரம் பிரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மேலும் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவைத் தொடர்ந்து குப்பைகளை விரைந்து திடக்கழிவு மேலாண்மை செய்யும் பணிகளும் நடந்து வருகின்றன.

இந்நிலையில் இன்று குப்பை கிடங்கின் தெற்கு பகுதியில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.

இதையடுத்து அங்கிருந்த தீயணைப்பு வாகனம் மூலம் தீ அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர்.

ஆனால் தீ, அரை ஏக்கர் பரப்பளவிற்குக் கொழுந்து விட்டு எரிந்ததால் தீயைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியாததால், உடனடியாக கோவை தெற்கு, கிணத்துக்கடவு, கோவைப்புதூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 4 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது.

தற்போது ஒரு ஏக்கர் பரப்பளவிற்குக் குப்பைகளை பொக்லைன் மூலம் அப்புறப்படுத்தி தீ அணைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்று குப்பை கிடங்கின் தெற்கு பகுதியில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.
இதையடுத்து அங்கிருந்த தீயணைப்பு வாகனம் மூலம் தீ அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர்.
ஆனால் தீ, அரை ஏக்கர் பரப்பளவிற்குக் கொழுந்து விட்டு எரிந்ததால் தீயைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியாததால், உடனடியாக கோவை தெற்கு, கிணத்துக்கடவு, கோவைப்புதூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 4 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது.
தற்போது ஒரு ஏக்கர் பரப்பளவிற்குக் குப்பைகளை பொக்லைன் மூலம் அப்புறப்படுத்தி தீ அணைக்கும் பணிகள் நடந்து வருகிறது.