கோவையிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு 240 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களுக்காக, கோவையிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு 240 சிறப்புப் பேருந்துகள் இன்று முதல் இயக்கம்.


கோவை: பொங்கல், தீபாவளி உள்ளிட்ட விடுமுறை நாட்களில் பொதுமக்கள் அதிகளவில் தங்கள் ஊருக்குச் சென்று வருவது வழக்கம். அதுவும் பொங்கல் பண்டிகைக்காக ஒரு வாரம் வரை தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் பணியாற்றுவோருக்கு விடுமுறை அளிக்கப்படுவதால், ஏராளமானோர் தங்களின் சொந்த ஊருக்குப் படையெடுப்பது வாடிக்கை.

இந்நிலையில் கோயம்புத்தூரிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்களின் வசதிக்காக விழாக்கால சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாகக் கோயம்புத்தூர் கோட்டத்துக்கு உட்பட்ட நான்கு பிரதான பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மார்க்கமாகச் செல்லும் பயணிகளுக்கு ஏதுவாகவும், சூலூர் பேருந்து நிலையத்திலிருந்து கரூர், திருச்சி மார்க்கமாகச் செல்லும் பயணிகளுக்கு ஏதுவாகவும், மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சேலம், திருப்பூர், ஈரோடு, ஆனைக்கட்டி, சத்தியமங்கலம் மார்க்கமாகச் செல்லும் பயணிகளுக்கு ஏதுவாகவும், புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஊட்டி, மேட்டுப்பாளையம் மார்க்கமாகச் செல்லும் பயணிகளுக்கு ஏதுவாகவும் விழாக்கால சிறப்புப் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.

கோவை முதல் மதுரை வரை 100 பேருந்துகளும், கோவை முதல் தேனி வரை 40 பேருந்துகளும், கோவை முதல் திருச்சி வரை 50 பேருந்துகளும், கோவை முதல் சேலம் வரை 50 பேருந்துகளும் மொத்தமாக 240 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் உக்கடம், காந்திபுரம் போன்ற மாநகரப் பேருந்து நிலையங்களிலிருந்து இணைப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. பொதுமக்களின் வசதிக்கும், தேவைக்கும் ஏற்ப கூடுதலாகப் பேருந்துகள் இயக்க தயாராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...