வால்பாறை அருகே உருளிக்கல் எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு வீடுகள் எரிந்து, பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம். தொழிலாளர்கள் அனைவரும் வேலைக்குச் சென்றதால், உயிர்ச் சேதம் தவிர்ப்பு.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 62 எஸ்டேடுகள் உள்ளன. இங்கு தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு எஸ்டேட் நிர்வாகம் சார்பில் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தங்கி தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் உருளிக்கல் எஸ்டேட் முதல் பிரிவு பகுதியில் உள்ள தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதியில் இன்று காலை 8 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

அப்போது வேலம்மாள் என்பவர் வீட்டிலிருந்து புகை வருவதைப் பார்த்த சிலர், உடனடியாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தனர்

தகவலறிந்து தீயணைப்புத் துறையினர் வருவதற்குள், தீ வேகமாகப் பரவியதால், தொழிலாளர்கள் டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைத்தனர்.

பின்னர் வந்த தீயணைப்புத் துறையினர் மற்ற வீடுகளுக்கு தீ பரவாமல் தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் ஆறு வீடுகள் எரிந்து சேதமாகியது.

இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமானது.

தொழிலாளர்கள் அனைவரும் வேலைக்குச் சென்றதால், உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.

தகவலறிந்து வந்த வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் உருளிக்கல் எஸ்டேட் முதல் பிரிவு பகுதியில் உள்ள தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதியில் இன்று காலை 8 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
அப்போது வேலம்மாள் என்பவர் வீட்டிலிருந்து புகை வருவதைப் பார்த்த சிலர், உடனடியாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தனர்
தகவலறிந்து தீயணைப்புத் துறையினர் வருவதற்குள், தீ வேகமாகப் பரவியதால், தொழிலாளர்கள் டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைத்தனர்.
பின்னர் வந்த தீயணைப்புத் துறையினர் மற்ற வீடுகளுக்கு தீ பரவாமல் தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் ஆறு வீடுகள் எரிந்து சேதமாகியது.
இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமானது.
தொழிலாளர்கள் அனைவரும் வேலைக்குச் சென்றதால், உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.
தகவலறிந்து வந்த வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.