வால்பாறை அருகே தொழிலாளர்கள் குடியிருப்பில் தீ விபத்து - 6 வீடுகள் எரிந்து நாசம்!

வால்பாறை அருகே உருளிக்கல் எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு வீடுகள் எரிந்து, பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம். தொழிலாளர்கள் அனைவரும் வேலைக்குச் சென்றதால், உயிர்ச் சேதம் தவிர்ப்பு.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 62 எஸ்டேடுகள் உள்ளன. இங்கு தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு எஸ்டேட் நிர்வாகம் சார்பில் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தங்கி தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் உருளிக்கல் எஸ்டேட் முதல் பிரிவு பகுதியில் உள்ள தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதியில் இன்று காலை 8 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.



அப்போது வேலம்மாள் என்பவர் வீட்டிலிருந்து புகை வருவதைப் பார்த்த சிலர், உடனடியாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தனர்



தகவலறிந்து தீயணைப்புத் துறையினர் வருவதற்குள், தீ வேகமாகப் பரவியதால், தொழிலாளர்கள் டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைத்தனர்.



பின்னர் வந்த தீயணைப்புத் துறையினர் மற்ற வீடுகளுக்கு தீ பரவாமல் தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் ஆறு வீடுகள் எரிந்து சேதமாகியது.



இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமானது.



தொழிலாளர்கள் அனைவரும் வேலைக்குச் சென்றதால், உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.



தகவலறிந்து வந்த வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...