கோவை செட்டிப்பாளையத்தில் வடமாநில தொழிலாளி அடித்துக் கொலை!

கோவை செட்டிபாளையத்தில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வட மாநில தொழிலாளியை அடித்துக்கொலை செய்த வழக்கில் குன்னூரை சேர்ந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


கோவை: கோவை செட்டிபாளையம் பெரியகுயிழி இடும்பன் கோவில் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கை கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக செட்டிபாளையம் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், சடலமாக மீட்கப்பட்ட நபர் பீகார் மாநிலத்தை சேர்ந்த லாலம் கேவத் (37) என்பதும், சூலூர் தென்னம்பாளையம் விஷாகா நகர் பகுதியில் அவர் குடும்பத்துடன் தங்கி, மோல்டிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

கொலையாளி குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட தொடர் விசாரணையில், நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த சார்லஸ் (34) என்பவர் உயிரிழந்த லாலம் கேவத் வீட்டின் அருகே வசித்து வந்ததும், கடந்த 8 ஆம் தேதி இருவரும் மது குடிக்க சென்றபோது, வாக்குவாதம் ஏற்பட்டு, அதில் ஆத்திரமடைந்த சார்லஸ், லாலம் கேவத்தை அடித்துக் கொலை செய்து விட்டு தலைமறைவானதும் உறுதியானது. இதையடுத்து, சார்லஸை கைது செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...