கோவை செட்டிப்பாளையத்தில் வடமாநில தொழிலாளி அடித்துக் கொலை!

கோவை செட்டிபாளையத்தில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வட மாநில தொழிலாளியை அடித்துக்கொலை செய்த வழக்கில் குன்னூரை சேர்ந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


கோவை: கோவை செட்டிபாளையம் பெரியகுயிழி இடும்பன் கோவில் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கை கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக செட்டிபாளையம் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், சடலமாக மீட்கப்பட்ட நபர் பீகார் மாநிலத்தை சேர்ந்த லாலம் கேவத் (37) என்பதும், சூலூர் தென்னம்பாளையம் விஷாகா நகர் பகுதியில் அவர் குடும்பத்துடன் தங்கி, மோல்டிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

கொலையாளி குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட தொடர் விசாரணையில், நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த சார்லஸ் (34) என்பவர் உயிரிழந்த லாலம் கேவத் வீட்டின் அருகே வசித்து வந்ததும், கடந்த 8 ஆம் தேதி இருவரும் மது குடிக்க சென்றபோது, வாக்குவாதம் ஏற்பட்டு, அதில் ஆத்திரமடைந்த சார்லஸ், லாலம் கேவத்தை அடித்துக் கொலை செய்து விட்டு தலைமறைவானதும் உறுதியானது. இதையடுத்து, சார்லஸை கைது செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...

பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பய...

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...