பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்ளி கொலை செய்த சம்பவம் நடந்தது. கோட்டூர் போலீசார் குற்றவாளியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.


Coimbatore: பொள்ளாச்சி அருகே குடும்ப பூசல் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒரு இளைஞரை கொலை செய்த வழக்கில் குற்றவாளியை கோட்டூர் போலீசார் கைது செய்துள்ளனர்.




கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (56). இவருடைய மகன் தமிழ்ச்செல்வன். அதே பகுதியில் அருகில் ஆனந்த் (29) என்பவர் தனது மனைவி பிரியாவுடன் வசித்து வந்தார்.




தமிழ்ச்செல்வனுக்கும் ஆனந்தின் மனைவி பிரியாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது தொடர்பாக இரு குடும்பங்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.




இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ஆனந்த் மது போதையில் பாலகிருஷ்ணன் வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டார். தகராறின் போது ஆனந்த் பாலகிருஷ்ணனை தள்ளியதில் அவர் கீழே விழுந்து தலையில் ரத்தக் காயம் ஏற்பட்டது.




சம்பவத்திற்குப் பிறகு பாலகிருஷ்ணன் தனது மூத்த மகள் தமிழ்ச்செல்வி வீட்டிற்கு சென்று ஆனந்த் தன்னை அடித்துவிட்டதாகவும், உடல் சோர்வாக இருப்பதாகவும் கூறினார். உடனடியாக தமிழ்ச்செல்வி தனது தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.




ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பாலகிருஷ்ணன் உயிரிழந்துவிட்டார். உடனடியாக தகவலறிந்த கோட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாலகிருஷ்ணனின் உடலை மீட்டு கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.




இது தொடர்பாக கோட்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குற்றவாளி ஆனந்த் கைது செய்யப்பட்டு மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...