கோவை கவுண்டம்பாளையம் அருகே கத்தியை காட்டி பணம் பறித்த வழக்கு - இருவர் கைது..!

கவுண்டம்பாளையம் அருகே நண்பரை சந்திக்க காத்திருந்தவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த கார்த்திக் மற்றும் கௌதம் ஆகிய இருவரை துடியலூர் போலீசார் கைது செய்து விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் தொப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நடேசன். கூலித் தொழிலாளியான இவர், தனது நண்பரை சந்திப்பதற்காக கவுண்டம்பாளையத்திற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், அப்பகுதியில் பெஸ்ட் ஆட்டோ எலக்ட்ரிகல்ஸ் கடை முன்பு காத்திருந்துள்ளார். அவர், செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த 2 பேர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பாக்கெட்டில் இருந்த 500 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனர்.



இது தொடர்பாக நடேசன் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது, புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் கௌதம் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...