கோவை சிங்காநல்லூரில் திமுக கலை இலக்கிய அணி சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா

சிங்காநல்லூரில் திமுக சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில், திமுக மகளிரணியினர் நூற்றுக்கும் மேற்பட்ட பானைகளில் சமத்துவ பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினர்.



கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதி திமுக சார்பில் கலை இலக்கிய அணி மாநில துணைச்செயலாளர் மீனா ஜெயக்குமார் மற்றும் செயலாளர் எஸ்.எம்.சாமி தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.



இந்த நிகழ்வில், திமுக மகளிர் அணியை சேர்ந்தவர்கள், 100க்கும் மேற்பட்ட மண் பானைகளில் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர்.



ஆண்டுதோறும் நடைபெறும் இந்த சமத்துவ பொங்கல் விழாவில், ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு "பொங்கலோ பொங்கல்" என முழக்கமிட்டு, தை முதல் நாளையும், பொங்கல் திருநாளையும், தமிழ் புத்தாண்டையும் வரவேற்றனர்.



இந்த சமத்துவ பொங்கல் விழாவில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...