கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குரலிசை, வீணை, தவில் நாதஸ்வரம், வயலின் உள்ளிட்ட துறைகளில் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிக பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 10, 2026.
Coimbatore: கோவையில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கான உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பட்டயம் மற்றும் இளங்கலை இசை பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு துறைகளில் வகுப்புகள் நடத்த தொகுப்பூதிய அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
பட்டயம் இசை பயிலும் மாணவர்களுக்கு குரலிசை, வீணை, தவில் நாதஸ்வரம் மற்றும் இசை இலக்கணம் துறைகளில் விரிவுரையாளர்களாக பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதேபோல் இளங்கலை இசை பயிலும் மாணவர்களுக்கு குரலிசை, வயலின், வீணை, பரதம், தமிழ், ஆங்கிலம், கணினி மற்றும் யோகா துறைகளில் உதவிப் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களாக பணியாற்ற விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பதாரர்கள் பட்டயம், இளங்கலை, இசை ஆசிரியர் பயிற்சி மற்றும் முதுகலை பட்டம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இசையில் முனைவர் பட்டம் அல்லது NET/SLET தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். விண்ணப்பதாரர்களின் வயது 30 ஆண்டுகளுக்கு மேல் இருக்க வேண்டும் என்றும், முன்பணி அனுபவம் தேவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களுக்கு மாதாந்திர தொகுப்பூதியமாக ரூ.20,000 மட்டுமே வழங்கப்படும். விண்ணப்பங்கள் கல்லூரியை ஜூலை 10, 2026-க்குள் வந்தடைய வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஜூலை 14, 2026 அன்று காலை 10.00 மணிக்கு துறை அனுமதித்த குழுவினரால் நேர்காணல் நடத்தப்படும்.
கல்லூரி காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இயங்கும். விண்ணப்பங்களை தபாலில் அனுப்ப விரும்பும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்: முதல்வர், தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, மலுமிச்சம்பட்டி அஞ்சல், செட்டிபாளையம் ரோடு, கோயம்புத்தூர்-641050 என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இசைக் கல்வியில் ஆர்வமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பட்டயம் இசை பயிலும் மாணவர்களுக்கு குரலிசை, வீணை, தவில் நாதஸ்வரம் மற்றும் இசை இலக்கணம் துறைகளில் விரிவுரையாளர்களாக பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதேபோல் இளங்கலை இசை பயிலும் மாணவர்களுக்கு குரலிசை, வயலின், வீணை, பரதம், தமிழ், ஆங்கிலம், கணினி மற்றும் யோகா துறைகளில் உதவிப் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களாக பணியாற்ற விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பதாரர்கள் பட்டயம், இளங்கலை, இசை ஆசிரியர் பயிற்சி மற்றும் முதுகலை பட்டம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இசையில் முனைவர் பட்டம் அல்லது NET/SLET தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். விண்ணப்பதாரர்களின் வயது 30 ஆண்டுகளுக்கு மேல் இருக்க வேண்டும் என்றும், முன்பணி அனுபவம் தேவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களுக்கு மாதாந்திர தொகுப்பூதியமாக ரூ.20,000 மட்டுமே வழங்கப்படும். விண்ணப்பங்கள் கல்லூரியை ஜூலை 10, 2026-க்குள் வந்தடைய வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஜூலை 14, 2026 அன்று காலை 10.00 மணிக்கு துறை அனுமதித்த குழுவினரால் நேர்காணல் நடத்தப்படும்.
கல்லூரி காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இயங்கும். விண்ணப்பங்களை தபாலில் அனுப்ப விரும்பும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்: முதல்வர், தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, மலுமிச்சம்பட்டி அஞ்சல், செட்டிபாளையம் ரோடு, கோயம்புத்தூர்-641050 என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இசைக் கல்வியில் ஆர்வமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.