கோவை மாநகர காவல்துறை சார்பில் காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில், கோவை மாநகர காவல்துறையினர் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினர்.
கோவை: பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வில், கோவை மாநகர காவல் துறையினர் அவர்களது குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.

மேலும் இந்த பொங்கல் விழாவில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அவரது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.

இந்த பொங்கல் விழாவில், பொங்கல் பொங்கி வரும் பொழுது அனைவரும் பொங்கலோ பொங்கல் என அனைவரும் முழக்கமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

மேலும் அனைவரும் கும்மி அடித்து பொங்கல் பாட்டு பாடி மகிழ்ச்சியுடன் பொங்கலை கொண்டாடினர்.

கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்ற இந்த பொங்கல் விழாவில், மாநகர காவல் துறையை சேர்ந்த காவலர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு, தனித்தனியாக பொங்கல் வைத்து படையலிட்டு சூரியனை வழிபட்டனர்.

இந்த நிகழ்வில், கோவை மாநகர காவல் துறையினர் அவர்களது குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.
மேலும் இந்த பொங்கல் விழாவில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அவரது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.
இந்த பொங்கல் விழாவில், பொங்கல் பொங்கி வரும் பொழுது அனைவரும் பொங்கலோ பொங்கல் என அனைவரும் முழக்கமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
மேலும் அனைவரும் கும்மி அடித்து பொங்கல் பாட்டு பாடி மகிழ்ச்சியுடன் பொங்கலை கொண்டாடினர்.
கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்ற இந்த பொங்கல் விழாவில், மாநகர காவல் துறையை சேர்ந்த காவலர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு, தனித்தனியாக பொங்கல் வைத்து படையலிட்டு சூரியனை வழிபட்டனர்.