திருப்பூரில் மதிமுக சார்பில் சமத்துவப் பொங்கல் விழா - 5000 பெண்கள் பங்கேற்பு!

திருப்பூரில் மதிமுக சார்பில் 5000 பெண்கள் பங்கேற்ற சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. மதிமுக திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் நாகராஜ் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில், மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கலந்துகொண்டார்.



திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி 24 வது வார்டு சாமுண்டிபுரம் பகுதியில் ஆண்டுதோறும் மதிமுக சார்பில் சமத்துவ பொங்கல் கொண்டாடுவது வழக்கம். அதன்படி, நேற்று திருப்பூர் மாநகராட்சி 24 வது வார்டு மாமன்ற உறுப்பினரும், மதிமுகவின் மாநகர் மாவட்ட செயலாளருமான நாகராஜ் ஏற்பாட்டில் 25வது ஆண்டு சமத்துவ பொங்கல் விழா சாமுண்டிபுரம் பகுதியில் நடைபெற்றது.



அனைத்து மதத்தை சார்ந்த 5000 பெண்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு சூரிய பொங்கல் வைத்தனர். இந்த நிகழ்ச்சியில், மதிமுகவின் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.



முன்னதாக சாமுண்டிபுரம் பகுதியை சேர்ந்த பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். இதனைத் தொடர்ந்து, மதிமுக கொடியினை தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ ஏற்றி வைத்து பொங்கல் விழா தொடங்கிவைத்தார்.



விழாவின் ஒரு பகுதியாக சாமுண்டிபுரத்தை சேர்ந்த புதுமண தம்பதிகளுக்கு மதிமுக சார்பில் பொங்கல் சீர்வரிசைகளோடு புத்தகங்களும் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து, பொங்கல் வைத்த பெண்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்த 400க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ,"பொங்கல் போன்ற பண்டிகைகள் தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் இருப்பதாகவும் , மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ சமத்துவ பொங்கல் விழாவை தொடர்ந்து ஊக்குவித்து வரக்கூடிய நிலையில் மதிமுகவின் நிர்வாகிகள் இதுபோன்ற சமத்துவ பொங்கல் கொண்டாடுவது மகிழ்ச்சி ஏற்படுத்துகிறது.

சமத்துவ பொங்கல் விழாக்கள் நாட்டின் ஒருமைப்பாட்டை உணர்த்தும். மதிமுக மட்டுமல்லாது அனைத்து இயக்கங்களும் சமத்துவ பொங்கல் விழாவை முன்னெடுத்து கொண்டாட வேண்டும். தொடர்ந்து தமிழகம் மற்றும் தமிழ்நாடு குறித்து ஆளுநர் சர்ச்சை ஏற்படுத்தி வருவது ஆளுநர் சனாதனக் கொள்கைகளோடு செயல்பட்டு வருவதை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்திருப்பதாக குற்றம்சாட்டினார்.

மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது பாஜகவின் நிர்பந்தத்தின் காரணமாக அதிமுக அதற்கு ஆதரவு தெரிவித்துவருகிறது. அதிமுகவும் ஒரு திராவிட இயக்கம்தான். ஆனால், தற்போது அதன் நிலைமை என்னவென்பதை தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் சிந்தித்து பார்க்க வேண்டும். அதற்கு யார் காரணம் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மேலும், கோவையில் உள்ள ஈஷா தியான மையத்தில் யோகா பயிற்சிக்குச் சென்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும், என்றார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...