கோவை தெற்குபாளையம் அருகே அனுமதியின்றி சேவல் சண்டை - 4 பேர் கைது!

கோவை தெற்குபாளையம் பகுதியில் போலீசார் நடத்திய ரோந்து பணியில் அனுமதியின்றி சேவல் சண்டையில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த போலீசார், சேவல் மற்றும் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் பெரிய நாயக்கன் பாளையம் காவல் எல்லைக்கு உட்பட்ட தெற்குப் பாளையம் பகுதியில் சிலர் சேவல் சண்டையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில், பெரியநாயக்கன் பாளையம் உதவி ஆய்வாளர் சிலம்பரசன் தலைமையில், போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பணம் வைத்து சேவல் சண்டையில் ஈடுபட்ட பெரிய நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த விஜயகுமார், மணிகண்டன், தெற்குப்பாளையத்தைச் சேர்ந்த ஜீவா சங்கர் மற்றும் கூடலூரைச் சேர்ந்த கலிவரதராஜன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.

அனுமதியின்றி சேவல் சண்டையில் ஈடுபட்டதாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 3 சேவல்கள் மற்றும் 300 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட 4 பேரையும் போலீசார் ஜாமீனில் விடுவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...