நீலகிரியில் களைகட்டிய காணும் பொங்கல் கொண்டாட்டம் - ஊட்டியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்..!

காணும் பொங்கலையொட்டி உதகைக்கு குடும்பம் குடும்பமாக படையெடுத்துள்ள சுற்றுலா பயணிகள் அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.



நீலகிரி: மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் உதகையில் பொங்கல் விடுமுறை காரணமாக கடந்த இரண்டு நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை என்பது வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது.



இந்த நிலையில் காணும் பொங்கல் தினமான இன்றும் சுற்றுலா பயணிகள் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை காண குவிந்து வருகின்றனர்.



குறிப்பாக குடும்பத்துடன் வரும் சுற்றுலா பயணிகள் அரசு தாவரவியல் பூங்காவில் சென்று கண்ணாடி மாளிகையை கண்டு ரசிப்பதுடன் கிக்யூ புல்வெளிகளிலும் அமர்ந்து குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ச்சியுடன் திரும்பி செல்கின்றனர்.

அதேபோல உதகை படகு இல்லத்தில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகள் மிதிபடகு, துடுப்பு படகு மற்றும் மோட்டார் படகுகளில் சவாரி செய்து உற்சாகத்துடன் செல்கின்றனர்.



இதே போல ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டா காட்சி முனைக்கு வந்த வண்ணமாக இருப்பதால் காலை முதலே தொட்டபெட்டா சாலையில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.



இதன் காரணமாக சுற்றுலா தலங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் காவல்துறை கண்காணிப்பு பணியை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...