உடுமலை கச்சேரி வீதியில் வாகனநெரிசல் - அவசர ஊர்திகள் ஊர்ந்து செல்லும் அவலம்..!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கச்சேரி வீதியில் நாளுக்குநாள் வாகன நெரிசல் அதிகரித்துவருகிறது. இதை சீர்படுத்த காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை கச்சேரி வீதியில் நீதிமன்றம், தாலுக்கா அலுவலகம், சார்ப்பதிவாளர் அலுவலகம், வங்கிகள் என முக்கியமான அரசு அலுவலகங்கள் செயல்பட்டுவருகின்றன. இதனால், அந்த வீதியில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. மேலும், இப்பகுதியில் அரசு மருத்துவமனையும் உள்ள காரணத்தால், அவசர ஊர்திகளும் இந்தக் கச்சேரி வீதியையே பயன்படுத்தி வருகின்றன.



இந்த நிலையில், கச்சேரி வீதியில் உணவகத்திற்கும் வருபவர்களும், வங்கிகளுக்கு வருபவர்களும் தாறுமாறாக வாகனங்களை நிறுத்துவதால், அவசர ஊர்திகள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால், அவ்வப்போது போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

இந்த சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில், சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவல்துறையினர், கச்சேரி வீதி பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களுக்கு போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...