கோவையில் காய்கறி விலை திடீர் சரிவு - காரணம் தெரியுமா?!

கோவையில் காய்கறிகளின் விலை அதிரடியாகக் குறைந்திருப்பது இல்லத்தரசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சபரிமலை சீசன் மற்றும் பொங்கல் பண்டிகைகள் முடிவடைந்ததே இந்த விலை சரிவுக்குக் காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: சபரிமலை சீசன் மற்றும் பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு கோவையில் காய்கறிகளின் விலை கடந்த சில வாரங்களாக ஏறுமுகத்தில் இருந்துவந்தது. குறிப்பாக தொண்டாமுத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் விளைச்சலாகும் காய்கறிகள், பூலுவபட்டி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.



கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.150 க்கு விற்பனையான மொச்சை, இன்று ரூ.20க்கு விற்பனையாகிறது, ரூ.50 ரூபாய்க்கு விற்பனையான மற்ற பயறு வகைகள் ரூ,20 ரூபாய்க்கும், ரூ.80 முதல் 90 க்கு விற்பனையான கத்தரிக்காய் தற்போது கிலோ ஒன்று 30 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

தக்காளி விலை ஏற்ற இறக்கமின்றி டிப்பருக்கு 500 ரூபாய் என்ற அளவில் இருந்துவருகிறது. தற்போது, பனிக்காலம் என்பதால் வெண்டை வரத்து குறைவாக இருப்பதால் அதன் விலை இன்னும் ஏறுமுகத்திலேயே இருந்துவருகிறது. மற்ற காய்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது.



வரக்கூடிய இரண்டு மாதங்களுக்கு சாகுபடி அதிகமாக இருக்கும் என்பதால், காய்கறிகளின் விலை இன்னும் குறையவே வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மொத்த சந்தையில் குறைவான விலையில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுவதால் சில்லறை விற்பனையிலும் அதன் விலை கடுமையாக சரிந்துள்ளது. இருப்பினும், காய்கறிகளின் விலை சரிவு கோவை வாழ் இல்லத்தரசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...