உடுமலை அருகே எஸ்வி புரத்தில் நிழற்கூரை அமைக்கக் கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள எஸ்.வி புரத்தில் நிழற்கூரை அமைக்க அதிகாரிகளுக்குச் சுற்றுவட்டார கிராம மக்கள் கோரிக்கை.


திருப்பூர்: எஸ்.வி புரத்தில் நிழற்கூரை அகற்றப்பட்ட இடத்தில் புதிய நிழற்கூரை அமைக்கக் கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை - கொழுமம் சாலையில் உள்ள எஸ்.வி.புரத்தில், நிழற்கூரை இருந்தது. நகரை ஒட்டியுள்ள, கணக்கம்பாளையம், கண்ணமநாயக்கனுார் கிராம ஊராட்சிகளிலிருந்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இதைப்பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில் அங்கிருந்த பேருந்து நிறுத்த நிழற்கூரை பழுதடைந்து, ஆபத்தான நிலையிலிருந்தது.

இதனையடுத்து, பேருந்து நிறுத்த நிழற்கூரை அகற்றப்பட்டது. ஆனால், புதிதாக நிழற்கூரை அமைக்காமல், பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், பேருந்திற்காகக் காத்திருக்கும் பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள், வெயிலிலும், மழையிலும் காத்திருக்கும் அவல நிலை உள்ளது.



மக்கள் சாலையில் காத்திருக்கும் போதும், அதிவேகமாக வரும் வாகனங்களாலும், பேருந்து நிறுத்தம் அடையாளம் இல்லாததால், தாறுமாறாக நிறுத்தப்படும். பேருந்துகளால் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. எனவே, எஸ்.வி.புரத்தில் புதிதாகப் பேருந்து நிறுத்த நிழற்கூரை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்து உள்ளது.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...