தாராபுரம் சி.எஸ்.ஐ பெண்கள் விடுதியில் பொங்கல் விழா - மாணவிகள் கொண்டாட்டம்

தாராபுரத்தில் உள்ள சி.எஸ்.ஐ பெண்கள் விடுதியில் பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு சென்ற மாணவிகள் திரும்பி வந்த நிலையில், விடுதி வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் சி.எஸ்.ஐ. பெண்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில், சுமார் 120 க்கும் மேற்பட்ட பெண்கள், தங்கி பள்ளியில் பயின்று வருகின்றனர்.



பொங்கல் விடுமுறை முடித்து விட்டு பள்ளிக்கு வந்த விடுதி மாணவிகளுக்கு விடுதி காப்பாளர் பொன்.சுகன்யா ஒருங்கிணைப்பில் இன்று (21/01/2023) பொங்கல் விழா நடைபெற்றது. விடுதி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் விடுதியில் தங்கியுள்ள பெண்கள் பொங்கல் வைத்து தமிழர் திருநாளை உற்சாகமாக கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில், விடுதியின் தாளாளர் ஹெலன் பிரேம் குமாரி கலந்து கொண்டு அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து கூறினார். மேலும், இந்த நிகழ்ச்சியில் விடுதி காப்பாளர் ஜாக்குலின் சமையலர்கள் சந்திரா, சுசீலா, விடுதி காவலர் வேலுச்சாமி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...