கோபி அருகே வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய பாஜக பிரமுகர் கைது

கோபிசெட்டிப்பாளையம் அருகே தன் வீட்டின்மீது தானே பெட்ரோல் குண்டை வீசிய பாஜக பிரமுகரால் பரபரப்பு.


ஈரோடு: பாஜக பிரமுகர் வீட்டின் மீது அதிகாலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சவண்டப்பூர் கணபதிபாளையத்தைச் சேர்ந்தவர் சண்முகம்(47). கூலித் தொழிலாளியான இவர், பிரதமர் மோடி பாசறையின் கோபி சட்டமன்றத் தொகுதி நிர்வாக குழு உறுப்பினராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்துடன் வீட்டில் தூங்கி உள்ளார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் வீட்டுக்கு வெளியே பயங்கர சத்தம் கேட்டது. இதையடுத்து அவர்கள் வீட்டின் கதவைத் திறந்து வெளியே வந்து பார்த்தனர். அப்போது பெட்ரோல் குண்டு ஒன்று வீட்டின் வெளிப்புறத்தில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

மேலும் அதன் அருகே மற்றொரு பெட்ரோல் குண்டு வெடிக்காமல் கிடந்ததையும் கண்டனர். இந்த சம்பவம் குறித்துக் கோபி போலீசாருக்கு உடனே தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெடிக்காமலிருந்த பெட்ரோல் குண்டை கைப்பற்றி விசாரித்தனர்.

பின்னர் மோப்பநாய் வீரா சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்திலிருந்து மோப்பம் பிடித்தபடி நாய் சண்முகத்தின் வீட்டை மட்டுமே சுற்றி வந்தது. இதனால் சண்முகத்தின் வீட்டை போலீசார் சோதனை செய்தனர். அப்போது போலீசார் பெட்ரோல் குண்டு தயாரிக்கத் தேவையான திரியின் பாகங்கள் சண்முகத்தின் வீட்டிலேயே இருந்ததைக் கண்டுபிடித்து போலீசார் கைப்பற்றினர்.

இதனால் போலீசாருக்கு சண்முகம் மீது சந்தேகம் எழுந்தது. இதன் காரணமாக அவரை பிடித்து கிடிக்குப்படி விசாரணை நடத்தியில், சண்முகம் தனது வீட்டின் மீது தானே பெட்ரோல் குண்டு வீசியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...