2 ஆண்டுகளாக சிறுமிக்கு பாலியல் கொடுமை - கோவையில் இருவர் கைது

கோவையில் 2 ஆண்டுகளாக 10 வயது சிறுமியை பாலியல் கொடுமை செய்து வந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: 10 வயது சிறுமியை வீட்டுக்கு அழைத்து பாலியல் வன்கொடுமை செய்த இருவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

கோவையை சேர்ந்தவர் ராஜ் என்கிற அதிர்ஷ்டராஜ் (27). இவருக்கு திருமணமாகி. மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் அதிர்ஷ்டராஜ், அதே பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி, வீட்டுக்குள் அழைத்து வந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து வெளியில் யாரிடம் சொல்லக்கூடாது என்றும் சிறுமியை மிரட்டியுள்ளார்.

நாளடைவில், அதிர்ஷ்டராஜின் நண்பரான எட்டிமடையை சேர்ந்த சுரேஷ்பாபுவிற்கும் இந்த விஷயம் தெரியவந்தது. இதையடுத்து நண்பர்கள் இருவரும் அந்த சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

சம்பவத்தன்று அந்த சிறுமி அதிர்ஷ்டராஜ் வீட்டில் இருந்து அழுதபடி வெளியே வந்துள்ளார். இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் அந்த சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது அந்த சிறுமி, அவர்களிடம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து எடுத்து கூறியுள்ளார்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக அதிர்ஷ்டராஜ் மற்றும் சுரேஷ் பாபு ஆகிய இருவரையும் பிடித்து கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் அந்த சிறுமியை கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...