உடுமலை எஸ்.வி.புரத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு - பொதுமக்கள் அவதி

உடுமலை எஸ்.வி.புரம் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால், அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை.


திருப்பூர்: எஸ்.வி.புரம் பகுதியில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளால் பொதுமக்கள் மற்றும் வாகன ஒட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை கொழுமம் ரோடு எஸ்.வி.புரம் வழியாக 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு, பிரதான வழித்தடமாக உள்ளது. நூற்றுக்கணக்கான வாகனங்கள், பொதுமக்கள் பயன்படுத்தும் நெரிசல் மிகுந்த இந்த சாலையின், நகரப்பகுதியில் சுமார் 2 கி.மீ., தூரத்திற்கு இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன.

மேலும், சாலையை ஆக்கிரமித்து, பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. பிரதான வழித்தடமாக உள்ள இந்த சாலையை, அகலப்படுத்தும் வகையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

இதைத் தொடர்ந்து அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், மீண்டும் சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து, போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் அதிகரித்து வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பொதுமக்கள் சார்பில் தமிழ்நாடு முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...