துடியலூர் அருகே தனியார் பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

துடியலூர் அருகே வி.எஸ்.கே. நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற 74வது குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக துடியலூர் காவல் பயிற்சி உதவி ஆய்வாளர் புவனேஸ்வரி பங்கேற்பு.


கோவை: வி.எஸ்.கே. நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 74வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.



சுதந்திர இந்தியாவின் 74வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர் அருகே வி.எஸ்.கே. நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் குடியரசு தினவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் தேசியக் கொடியினை ஏற்றிவைத்தார். பள்ளி மாணவ மாணவிகள் சுபாஸ் சந்திரபோஸ், வேலுநாச்சியார், பாரதியார், ஜவர்கலால் நேரு, திருப்பூர் குமரன் உள்ளிட்ட தேசத் தலைவர்கள் போன்றும் கல்பனா சாவ்லா, ரோபோட் போன்றும் வேடம் அணிந்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.



இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக துடியலூர் காவல் பயிற்சி உதவி ஆய்வாளர் புவனேஸ்வரி கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கி மாணவ மாணவிகளிடம் உரையாற்றினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...