கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான செயற்கை நீரூற்றின் சோதனையோட்டத்தை, பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
கோவை: ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீருற்றின் சோதனையோட்டம் இன்று நடைபெற்றது.

கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரேஸ்கோர்ஸ் பகுதியில் மாதிரி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக, கிளப் சாலை அரசு கல்லூரி சந்திக்கும் பகுதியில் இருந்த தீவுத்திடல் மாற்றி அமைக்கப்பட்டு பிரம்மாண்டமான செயற்கை நீரூற்று அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது.

தற்போது இந்தப் பணிகள் நிறைவடைந்த நிலையில், செயற்கை நீரூற்றுக்கான சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு நேரத்தில் நடத்தப்படும் சோதனையோட்டத்தின்போது, பல வண்ணங்களில் மிளிரும் பிரம்மாண்ட செயற்கை நீரூற்றை அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் உற்சாகத்துடன் பார்த்து ரசித்துவருகின்றனர்.
கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரேஸ்கோர்ஸ் பகுதியில் மாதிரி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக, கிளப் சாலை அரசு கல்லூரி சந்திக்கும் பகுதியில் இருந்த தீவுத்திடல் மாற்றி அமைக்கப்பட்டு பிரம்மாண்டமான செயற்கை நீரூற்று அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது.
தற்போது இந்தப் பணிகள் நிறைவடைந்த நிலையில், செயற்கை நீரூற்றுக்கான சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு நேரத்தில் நடத்தப்படும் சோதனையோட்டத்தின்போது, பல வண்ணங்களில் மிளிரும் பிரம்மாண்ட செயற்கை நீரூற்றை அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் உற்சாகத்துடன் பார்த்து ரசித்துவருகின்றனர்.