கோவையில் தலைக்கவசம் அணியாமல் பயணம் - 937 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!

கோவை மாநகர காவல்துறை சார்பில் மாநகர் முழுவதும் சிறப்பு சோதனைச் சாவடிகள் அமைத்து வாகனங்கள் சோதனையிடப்பட்டதில், தலைக்கவசம் அணியாமல் வந்த 937 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டியதாக 937 பேர் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை மாநகரில் 100 சதவீத கட்டாயத் தலைக்கவசம் அணிவதை உறுதிப்படுத்தும் வகையில், ஜன.27ம் தேதி மாநகரின் 15 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து இருசக்கர வாகனங்கள் சோதனையிடப்படும் என கடந்த 24ம் தேதி மாநகர காவல்துறை அறிவித்தது.

அதன்படி, நேற்று காலை முதல் மாலை வரை கோவை மாநகர காவல்துறை சார்பில் 15 இடங்களில் சிறப்பு சோதனைச் சாவடிகள் அமைத்து வாகனங்கள் சோதனையிடப்பட்டன.



அவற்றில், 1,282 வாகனங்களில் தலைக்கவசம் இன்றி வந்தவர்களில் 937 பேர் மீது போக்குவரத்து சட்டவிதிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 345 பேர் காவல்துறையினரால் எச்சரித்து அனுப்பப்பட்டனர்.

மேலும், தலைக்கவசம் அணிந்து வந்த 2543 பேர் மற்றும் தலைக்கவசம் அணியாமல் வந்த 1282 பேர் என மொத்தம் 3875 பேருக்கு போக்குவரத்து சட்டவிதிகள் பற்றியும், இருசக்கர வாகனங்களில் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்வது குறித்தும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டதாக கோவை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...