உடுமலை அருகே பயணிகள் நிழற்குடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் சாலைமறியல் - பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த கொழுமம் பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் விவகாரத்தில் பாஜக - திமுக இடையே மோதல் ஏற்படும் சூழலில் பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மடத்துக்குளம் அருகே உள்ளது கொழுமம் ஊராட்சி. இந்த பகுதியில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.15 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகள் தொடங்கியது.

இந்நிலையில், அப்பகுதியில் பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டால் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படும் எனக்கூறி பா.ஜ.க.வினர் தடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து குமரலிங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

பொதுமக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த விடாமல் பாஜக-வினர் இடையூறு செய்வதாக கூறி திமுகவினர் சார்பிலும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனால் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழல் உருவானதாக தெரிகிறது.

இதனிடையே திருப்பூர் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தேன்மொழிவேல் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.



மேலும் மடத்துக்குளம் தாசில்தார் செல்வி சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தார்.



இதனையடுத்து பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகள் தொடங்கியது.



இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மங்கலம் ரவி தலைமையில் மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன், உடுமலை நகரச் செயலாளர் கண்ணாயிரம் உள்ளிட்ட பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி தனியார் திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர்.



இதனையடுத்து அவர்களிடம் தாசில்தார் செல்வி பேச்சுவார்த்தை நடத்தினார்.



அப்போது, உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இறுதி முடிவு எடுக்கும் வரை பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இருதரப்பினரும் அடுத்தடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இருதரப்பினரும் ஒன்று திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...