பொருளாதார மந்த நிலையால் ஆட்குறைப்பு அதிகரிக்கும் - கோவை தொழில் துறையினர் தகவல்!

பொருளாதார மந்த நிலையால் தனியார் நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கை அதிகரிக்கும் என்று கோவை தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: தொழில் நகரான கோவை உற்பத்தி, சேவை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையில் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, பல்வறு மாநிலங்களை சேர்ந்த 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.



உலகளாவிய பொருளாதார மந்தநிலையின் தாக்கம், இந்தியாவில் தென்பட தொடங்கியுள்ளதாகவும், இதனால் கோவை மாவட்டத்தில் ஏப்ரல் முதல் பல்வேறு நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கை அதிகரிக்கும் எனவும் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.



தமிழ்நாடு சூரியஒளி ஆற்றல் உற்பத்தியாளர்கள் சங்க (டான்ஸ்பா) பொருளாளர் சாஸ்தா எம்.ராஜா கூறியதாவது:

உலகளவில் பல நாடுகளில் தற்போது பொருளாதார மந்தநிலை நிலவுகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் தற்போது தெரியவருகிறது. சந்தையில் மக்களின் வாங்கும் திறன் கணிசமாக குறைந்துவிட்டது. இதனால் வணிகம் மற்றும் அதை சார்ந்த செயல்பாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உற்பத்தித் துறையில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களில் கடந்த பல மாதங்களாக 30 முதல் 40 சதவீதம் வரை பணிகள் குறைக்கப்பட்டுள்ளன.

வரும் ஏப்ரல் மாதத்துக்குப்பின் பல நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குறைந்தபட்சம் ஓராண்டுக்கு மந்தநிலையின் தாக்கம், கோவையில் இருக்கும். அதற்கு பின் நிலை சீரடைய வாய்ப்புள்ளது. ஆட்குறைப்பு பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பிரத்யேக திட்டங்களை செயல்படுத்தி தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க தமிழக அரசு முன்வரவேண்டும்.



இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் (சிஐஐ) கோவை மாவட்ட தலைவர் பிரசாந்த் கூறியதாவது:

தகவல் தொழில்நுட்பத் துறையை பொறுத்தவரை, கோவை மாவட்டத்தில் ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். உலகளாவிய பொருளாதார மந்தநிலையின் தாக்கம் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணி ஆணைகளில் எதிரொலிக்க தொடங்கியுள்ளது.

இருப்பினும் அதிக வளர்ச்சி இருக்கும் என்ற நோக்கத்தில் தொழில் நிறுவனங்களில் செயல்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் மட்டுமே தற்போதுள்ள சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் கூடுதலாக பணியமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர்களை குறைக்க நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும், என்றார்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...