பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில் இறந்த நிலையில் பெண் யானை மீட்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில் இறந்த நிலையில் பெண் யானையின் உடல் மீட்பு.


கோவை: நீலாம்பதி சரக பகுதியில் காப்புக் காட்டிற்குள் இறந்த நிலையில் பெண் யானை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம், தோலம்பாளையம் பிரிவு நீலாம்பதி சரக பகுதியில் காப்புக் காட்டிற்குள் வனப் பணியாளர்களின் வழக்கமான ரோந்துப் பணிக்குச் சென்றனர்.

அப்போது சுமார் 20-30 வயது மதிக்கத்தக்கப் பெண் யானை இறந்த நிலையிலிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் தலைமையிலான குழுவினர் அந்த வனப் பகுதியைத் தணிக்கை செய்தனர்.

மேலும் மாலை நேரம் ஆனதால் இறந்த யானைக்கு நாளை காலை கோவை மாவட்ட வன அலுவலர், உதவி வனப் பாதுகாவலர், தன்னார்வ தொண்டு அமைப்பினர்கள், கிராம வனக் குழுத் தலைவர் மற்றும் வனக் பணியாளர்கள் முன்னிலையில், வனக் கால்நடை அலுவலர் தலைமையிலான மருத்துவக் குழுவினரால் உடல்கூறாய்வு பரிசோதனை நடைபெற உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...