கோவை சோமனூரில் இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து - சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கோவை சோமனூர் சாலையில் இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், படுகாயமடைந்த, பள்ளிக்குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி- கணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி மல்லிகா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், மல்லிகா தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.



சோமனூர் சாலையை கடக்க முயன்றபோது, கல்லூரி மாணவர்கள் வந்த இருசக்கர வாகனம், இவர்களின் வாகனம் மீது பயங்கரமாக மோதியது.



இந்த விபத்தில், மல்லிகாவுடன் பயணித்த இரண்டு குழந்தைகளும், இரு சக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவர்களும் தூக்கி வீசப்பட்டனர்.

இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இதனிடையே இருசக்கர வாகனங்கள் மோதும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அதில், மல்லிகா தனது இரண்டு குழந்தைகளுடன் சாலையை கடக்க முயல்வதும், கல்லூரி மாணவர்கள் வந்த இருசக்கர வாகனம் பயங்கரமாக நேருக்கு நேராக மோதி, அனைவரும் தூக்கி வீசப்பட் காட்சிகள் பதிவாகியுள்ளது .

சினிமா சண்டைக்காட்சிகளைப் போன்று அரங்கேறியுள்ள இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

Newsletter

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...