உலக சதுப்பு நில தினம்: உதகை அரசு கல்லூரியில் கட்டுரை, ஓவியம் போட்டி!

உதகை அரசு கலைக்கல்லூரியில் சதுப்பு நிலங்களை பாதுகாப்பது குறித்து நடைபெற்று வரும் கட்டுரை, ஓவியம் மற்றும் பேச்சு போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக் கல்லூரியில் உலக சதுப்பு நில தினத்தையொட்டி, சதுப்பு நில பாதுகாப்பு குறித்த தலைப்பில், பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

ஆண்டுதோறும் பிப்ரவரி 2-ந்தேதி உலக சதுப்பு நில தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சதுப்பு நிலங்கள் மண் அரிப்பை தடுப்பதற்கும், கடல் அலைகள் மற்றும் சூறைக்காற்றில் இருந்து மரங்களை காக்கவும், தண்ணீரை அதிக நாட்கள் சேமித்து வைக்கவும் உதவுகிறது.



இதனையொட்டி உதகை அரசு கலைக்கல்லூரியில் சதுப்பு நிலங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து பாதுகாக்கும் விதமாக மாவட்ட அளவிலான ஓவிய போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.



நீலகிரி மாவட்ட உதவி வன அலுவலர் தேவராஜ் தலைமையில், வனவிலங்கு அறிவியல் துறை பேராசிரியர் ராமகிருஷ்ணன் முன்னிலையில், இந்த போட்டிகள் நடைபெற்று வருகிறது. 2 நாட்கள் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

இந்நிகழ்ச்சியில் அரசு கலை கல்லூரி பொறுப்பு முதல்வர் எபினேசர் மற்றும் கல்லூரி மாணவ - மாணவிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...