உலக சதுப்பு நில தினம்: உதகை அரசு கல்லூரியில் கட்டுரை, ஓவியம் போட்டி!

உதகை அரசு கலைக்கல்லூரியில் சதுப்பு நிலங்களை பாதுகாப்பது குறித்து நடைபெற்று வரும் கட்டுரை, ஓவியம் மற்றும் பேச்சு போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக் கல்லூரியில் உலக சதுப்பு நில தினத்தையொட்டி, சதுப்பு நில பாதுகாப்பு குறித்த தலைப்பில், பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

ஆண்டுதோறும் பிப்ரவரி 2-ந்தேதி உலக சதுப்பு நில தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சதுப்பு நிலங்கள் மண் அரிப்பை தடுப்பதற்கும், கடல் அலைகள் மற்றும் சூறைக்காற்றில் இருந்து மரங்களை காக்கவும், தண்ணீரை அதிக நாட்கள் சேமித்து வைக்கவும் உதவுகிறது.



இதனையொட்டி உதகை அரசு கலைக்கல்லூரியில் சதுப்பு நிலங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து பாதுகாக்கும் விதமாக மாவட்ட அளவிலான ஓவிய போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.



நீலகிரி மாவட்ட உதவி வன அலுவலர் தேவராஜ் தலைமையில், வனவிலங்கு அறிவியல் துறை பேராசிரியர் ராமகிருஷ்ணன் முன்னிலையில், இந்த போட்டிகள் நடைபெற்று வருகிறது. 2 நாட்கள் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

இந்நிகழ்ச்சியில் அரசு கலை கல்லூரி பொறுப்பு முதல்வர் எபினேசர் மற்றும் கல்லூரி மாணவ - மாணவிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...