'கோவைக்கு என்றும் என் இதயத்தில் தனி இடம் உண்டு..!' - ஆட்சியர் சமீரன் உருக்கம்

கோவை மக்களின் அன்பும் பாசமும் என்னை மிகவும் கவர்ந்தன. கோவைக்கு என்றும் என் இதயத்தில் தனி இடம் உண்டு என்று கோவை ஆட்சியராக இருந்து சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட ஆட்சியர் சமீரன், தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவு.


கோவை: தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியராக உள்ள ஜி.எஸ்.சமீரன் சென்னை மாநகராட்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நாளை சென்னை செல்லும் அவர் அங்குப் பதவி ஏற்றுக் கொள்ள உள்ளார். இந்நிலையில் கோவை மக்களின் அன்பும் பாசமும் தன்னை மிகவும் கவர்ந்தன எனவும் கோவைக்கு என் இதயத்தில் என்றும் தனியிடம் உண்டு என்று அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், "அன்புள்ள கோவை மக்களே, கோவையில் எனக்குத் திருப்தியான பதவிக் காலமாக இருந்தது. இந்தக் காலகட்டத்தில் நாங்கள் இணைந்து பல விஷயங்களைச் செய்து பல விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையைத் தொட்டோம்.

கோவிட் நெருக்கடிக் காலத்திலிருந்து இன்று வரை நீங்கள் அனைவரும் அனைத்து நல்ல காரியங்களுக்காகவும் மாவட்ட நிர்வாகத்திற்கு உறுதுணையாக இருந்தீர்கள். கோவை மக்களின் அன்பும் பாசமும் என்னை மிகவும் கவர்ந்தன. கோவைக்கு என்றும் என் இதயத்தில் தனி இடம் உண்டு. உங்கள் அனைவருக்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...