17வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை - பொள்ளாச்சி இளைஞர் மீது சிறுமி புகார்!

பொள்ளாச்சியில் கடையில் வேலைப்பார்த்த 17 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த கடை உரிமையாளரின் மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் பிளஸ்-2 வரை படித்து முடித்து விட்டு பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன்.

அப்போது அந்த நிறுவனத்தின் உரிமையாளரின் 27 வயது மகனுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் எங்களது காதலை வளர்த்து வந்தோம்.

இந்த காதல் விவகாரம் எங்களது பெற்றோருக்குத் தெரிய வரவே எதிர்ப்பு கிளம்பியது. இந்தநிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 7-ந்தேதி நாங்கள் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறினோம். பின்னர் என்னை எனது காதலர் தர்மபுரிக்கு அழைத்துச் சென்றார்.

கணவன்-மனைவி என கூறி பஸ் நிலையம் அருகே உள்ள வீட்டில் குடியிருந்தோம். பின்னர் அந்த பகுதியில் உள்ள துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தோம். நாங்கள் 2 பேரும் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வசித்து வந்தோம். அப்போது எனது காதலன் என்னிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்தார்.

கடந்த சில நாட்களாக எங்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக எனது காதலர் என்னிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று 5 மாதம் என்னை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு, ஏமாற்றி சென்ற எனது காதலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். சிறுமியை போலீசார் பரிசோதனைக்காகப் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து திருமண ஆசை காட்டி சிறுமியை ஏமாற்றிய அவரது காதலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் தேடுவதால் அவர் தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...