கோவை சாலைகளில் இனி 'அ, ஆ, இ, ஈ' படிக்கலாம் மக்களே..! - தமிழுக்கு பெருமை சேர்க்கும் புதிய முயற்சி!

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மீடியா டவரில் தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் உயிரெழுத்துக்களான அ, ஆ, இ, ஈ பதிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.



கோவை: கோவை மாநகரை அழகுற மாற்றும் வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மக்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதியான ரேஸ்கோர்ஸ் பகுதியில் செயற்கை நீரூற்று மற்றும் மீடியாடவர் அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இவ்விரு பணிகளும் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டி விட்ட நிலையில், தமிழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் இந்தப் பகுதிகளில் அ, ஆ, இ, ஈ என தமிழ் எழுத்துகளை பதிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.



இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ஸ்மார்ட் சிட்டியில் தமிழ்மொழி உணர்வை பிரதிபலிக்கும் வகையில் அ, ஆ, இ, ஈ என்ற எழுத்துகளை பதிக்கின்றோம்.



இதன் மூலம் இப்பகுதியில் எப்படி வந்தாலும் மேல்இருந்தும்., கீழே இருந்தும் எழுத்துகளை முழுமையாக படிக்க முடியும்.



குழந்தைகள் இவ்வெழுத்துகளை எளிமையாக படிக்க வாய்ப்பு கிடைக்கிறது. மேலும், மாலை நேரங்களில் ஒளிரும் விளக்குகளில் இந்த எழுத்துக்கள் பிரகாசமாக தெரியும் வகையில் அமைக்கப்பட்டுவருகிறது. அடுத்த வார இறுதிக்குள் இந்தப் பணிகள் முழுமை பெற்றுவிடும், என்றனர்.



ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடர்பாக அவ்வப்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வரும் நிலையில், கோவை மக்கள் இவற்றின் முழுமையான வடிவை காண ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Newsletter

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...