கோட்டை ஈஸ்வரன் கோவிலில் தைப்பூச திருவிழா நடைபெறுவதையொட்டி அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு, வழக்கத்தை விட கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
கோவை: கோவையில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த கோட்டை ஈஸ்வரன் கோவிலில் நடைபெறும் தைப்பூச திருவிழாவிற்கு பாதுகாப்பு பணிக்காக வழக்கத்தை விட கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் கடவுள் முருகன் பக்தர்கள் பெரிதும் எதிர்பார்த்திருக்கும் மாதங்களில் ஒன்று தை மாதம் தான். ஏனென்றால், தை மாதம் பிறந்தவுடன் வருடந்தோறும் தைப்பூச நன்னாளில் முருக பெருமானுக்கு பக்தி பரவசத்துடன் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டு வருகின்றனர்.
முருக பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை மட்டுமின்றி மருதமலை போன்ற புகழ்பெற்ற முருகன் கோயில்களில், முருகன் கடவுள் குடிகொண்ட அனைத்து கோயில்களிலும் தைப்பூச பூஜைகள் நடக்கின்றன.

அந்த வகையில் கோயமுத்தூர் கோட்டை ஈஸ்வரன் கோயிலில் ஈஸ்வரன் மற்றும் பார்வதி, முருகன் கடவுள் குடிகொண்டதனால் தை பூசைகள் நடக்கும். இந்த நிலையிலே இரண்டு வருடங்களாக கொரோனாவின் காரணமாக பக்தர்கள் இன்றி தைப்பூச பூசைகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், இந்த வருடம் கொரோனா கட்டுப்பாடுகள் நீங்கி பக்தர்கள் புடை சூழ பூசைகள் நடக்கின்றன. இந்த நிலையில் கோவை கோட்டை ஈஸ்வரன் கோயிலில் போலீசார் வழக்கத்தை விட கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

சில மாதங்களுக்கு முன் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பதற்றமான சூழலை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்து அமைப்புகள், பாஜகவினர் வழிபடும் முக்கிய கோயில்களில் ஒன்றான கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு அதிகளவில் மக்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

இந்நிலையில், முந்தைய நிகழ்வுகளை மனதில் கொண்ட காவல்துறை அதிகாரிகள் கோட்டை ஈஸ்வரன் கோவில் தைப்பூச திருவிழாவையொட்டி பாதுகாப்பு பணிக்காக வழக்கத்தை விட கூடுதல் போலீசாரை ஈடுபடுத்தியுள்ளனர்.

மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில், துணை ஆணையாளர் சிலம்பரசன் மேற்பார்வையில், உதவி ஆணையாளர் வீரபாண்டி தலைமையிலான 4 காவல் ஆய்வாளர்கள் உட்பட 230க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
தமிழ் கடவுள் முருகன் பக்தர்கள் பெரிதும் எதிர்பார்த்திருக்கும் மாதங்களில் ஒன்று தை மாதம் தான். ஏனென்றால், தை மாதம் பிறந்தவுடன் வருடந்தோறும் தைப்பூச நன்னாளில் முருக பெருமானுக்கு பக்தி பரவசத்துடன் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டு வருகின்றனர்.
முருக பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை மட்டுமின்றி மருதமலை போன்ற புகழ்பெற்ற முருகன் கோயில்களில், முருகன் கடவுள் குடிகொண்ட அனைத்து கோயில்களிலும் தைப்பூச பூஜைகள் நடக்கின்றன.
அந்த வகையில் கோயமுத்தூர் கோட்டை ஈஸ்வரன் கோயிலில் ஈஸ்வரன் மற்றும் பார்வதி, முருகன் கடவுள் குடிகொண்டதனால் தை பூசைகள் நடக்கும். இந்த நிலையிலே இரண்டு வருடங்களாக கொரோனாவின் காரணமாக பக்தர்கள் இன்றி தைப்பூச பூசைகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், இந்த வருடம் கொரோனா கட்டுப்பாடுகள் நீங்கி பக்தர்கள் புடை சூழ பூசைகள் நடக்கின்றன. இந்த நிலையில் கோவை கோட்டை ஈஸ்வரன் கோயிலில் போலீசார் வழக்கத்தை விட கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
சில மாதங்களுக்கு முன் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பதற்றமான சூழலை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்து அமைப்புகள், பாஜகவினர் வழிபடும் முக்கிய கோயில்களில் ஒன்றான கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு அதிகளவில் மக்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்நிலையில், முந்தைய நிகழ்வுகளை மனதில் கொண்ட காவல்துறை அதிகாரிகள் கோட்டை ஈஸ்வரன் கோவில் தைப்பூச திருவிழாவையொட்டி பாதுகாப்பு பணிக்காக வழக்கத்தை விட கூடுதல் போலீசாரை ஈடுபடுத்தியுள்ளனர்.
மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில், துணை ஆணையாளர் சிலம்பரசன் மேற்பார்வையில், உதவி ஆணையாளர் வீரபாண்டி தலைமையிலான 4 காவல் ஆய்வாளர்கள் உட்பட 230க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.