கோவை சூலூரில் தடையை மீறி மதுவிற்பனை - காவல்துறை சோதனைக்கு பயந்து ஆன்லைனில் பணம் வசூல்..!

தைப்பூசத்தை முன்னிட்டு கோவையில் உள்ள அரசு மதுபான கடைகள் செயல்பட விதிக்கப்பட்ட தடையை மீறி சூலூரில் சட்டவிரோதமாக 2 பார்களில் நடைபெறும் மதுவிற்பனையை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை.



கோவை: கோவை சூலூரில் ஆட்சியரின் உத்தரவை மீறி மதுவிற்பனை நடைபெறுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தைப்பூசத் திருநாளை முன்னிட்டு கோவை மாவட்டம் முழுவதும் இன்று அரசு மதுபானக்கடைகள் மற்றும் அரசு அனுமதி பெற்ற பார்களில் மதுபானங்கள் விற்க கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.



இந்நிலையில் சூலூர் வட்டம் சுல்தான்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் அரசு மதுபானக்கடைகளான கடை எண் 2212 மற்றும் 2267 ஆகிய கடைகளில் இயங்கும் பார்களில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.



சட்டவிரோதமாக விற்கப்படும் மது பாட்டில்களுக்கான பணத்தை கூகுள்பே மற்றும் paytm ஸ்கேனர் வைத்து வசூல் செய்யும் நிகழ்வும் அரங்கேறி வருவதாகவும் தெரிகிறது.



டிஜிட்டல் முறையில் பணத்தை பெற்றுக் கொண்டால் திடீரென காவல்துறை ஆய்வு மேற்கொண்டாலும் பணமாவது தப்பிக்கும் என்ற நம்பிக்கையில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் இருப்பவர்கள் இந்த ஏற்பாட்டை செய்துள்ளனர்.



இவ்வாறு சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபடுவோர் 150 ரூபாய் விற்கக்கூடிய ஒரு மது பாட்டிலை 300 முதல் 400 ரூபாய் வரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்து வருவதாக தெரியவந்துள்ளது.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மீறி மது விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...