கோவையில் போலீசாருக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு நிறைவு விழா - மாநகர காவல் ஆணையர் சாகசம்

கோவையில் நடைபெற்ற போலீசாருக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு நிறைவு விழாவில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ரோப் கட்டி 3வது மாடியில் இருந்து சரசரவென இறங்கியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.



கோவை: கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் டி-பிரிவு போலீசாருக்கு சிறப்பு பணிக்குழு சார்பாக நடைபெற்ற பயிற்சி வகுப்புகள் நிறைவு பெற்றது.



கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் டி-பிரிவு போலீசாருக்கு கடந்த மூன்று நாட்களாக சிறப்பு பணி குழு சார்பில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.



இந்த பயிற்சியில் கோவை மாநகரத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட 30 போலீசாருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தது.



இதில் பிணை கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டவர்களை மீட்பது, தீவிரவாதிகளை ஒடுக்குவது, மறைந்திருக்கின்ற குற்றவாளிகளை பிடிப்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.



இதைத்தொடர்ந்து நிறைவு நாளான இன்று டெமோ வகுப்பு நடைபெற்றது.



இதில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் சிறப்பாக செயல்பட்ட போலீசாரை காவல் ஆணையர் பாராட்டினர்.



இந்நிலையில் கமிஷனர் பாலகிருஷ்ணன் மூன்றாவது மாடியில் இருந்து ரோப் மூலம் இறங்கி சாகத்தில் ஈடுபட்டது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...